யதா2 தீ3போ1 நிவாத1ஸ்தோ2 நேங்க3தே1 ஸோப1மா ஸ்ம்ருதா1 |
யோகி3னோ யத1சி1த்1த1ஸ்ய யுந்ஜதோ1 யோக3மாத்1மன: ||19||
யதா—--எவ்வாறு; தீபஹ----ஒரு விளக்கு; நிவாத-ஸ்தஹ----காற்று இல்லாத இடத்தில்; ந—-இல்லை; இங்கதே---- நடுக்கத்துடன் சுடருமோ; ஸா--—இது; உபமா--—ஒப்புமை; ஸ்ம்ருதா--—கருதப்படுகிறது; யோகினஹ----ஒரு யோகியின்; யத--சித்தஸ்ய--—-யாருடைய மனம் ஒழுக்கமுடையதோ; யுந்ஜதஹ——நிலையாக பயிற்சி செய்தல்; யோகம்--—தியானத்தில்; ஆத்மனஹ-----உயர்ந்த மீது
BG 6.19: காற்று இல்லாத இடத்தில் விளக்கு ஒளிராமல் இருப்பது போல, யோகியின் ஒழுக்கமான மனம், பரமாத்மாவின் தியானத்தில் நிலையாக இருக்கும்.
யதா2 தீ3போ1 நிவாத1ஸ்தோ2 நேங்க3தே1 ஸோப1மா ஸ்ம்ருதா1 |
யோகி3னோ யத1சி1த்1த1ஸ்ய யுந்ஜதோ1 யோக3மாத்1மன: ||19||
காற்று இல்லாத இடத்தில் விளக்கு ஒளிராமல் இருப்பது போல, யோகியின் ஒழுக்கமான மனம், பரமாத்மாவின் தியானத்தில் நிலையாக இருக்கும்.
Sign in to save your favorite verses.
Sign InStart your day with the timeless inspiring wisdom from the Holy Bhagavad Gita delivered straight to your email!
இந்த வசனத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு விளக்கின் சுடரின் உவமையை தருகிறார். காற்றில், சுடர் இயற்கையாகவே மின்னுகிறது, மற்றும் கட்டுப்படுத்த இயலாது. இருப்பினும், காற்று இல்லாத இடத்தில் சுடர் ஒரு படத்தைப் போல நிலையானதாக மாறும். அதேபோல, மனமும் இயற்கையால் நிலையற்றது மற்றும் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், ஒரு யோகியின் மனம் கடவுளோடு இணைந்திருக்கும்போது, அது ஆசைகளின் காற்றிலிருந்து விலக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது அத்தகைய யோகி பக்தியின் சக்தியால் மனதை சீராகக் கட்டுப்படுத்துகிறார்.